தமிழாய்வுத்துறை  -  1981 முதல் <

461 வெளியீடுகள்
59 பேராசிரியர்கள்
157 மாணாக்கர்
5 படிப்புகள்


தமிழாய்வுத்துறை


      
அரியாசனம் உனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே!


உலகச் செம்மொழிகளுள் உயிர்ப்புடன் திகழுகின்ற செந்தமிழ். கீழடி ஆய்வு வழி உலக மொழி வரலாற்றில் மேலடி எடுத்து வைத்தப் பைந்தமிழ். உலகத் தோற்றத்தோடு ஒப்ப வைத்து எண்ணத்தக்க செழுந்தமிழ். பழம்பெருமையும் புதுப்பொலிவும் ஒருங்கே பெற்ற தாய்த்தமிழ் மொழியை, உயர் கல்வியாகக் கற்பிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது பெருமைமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை.

திருச்சிராப்பள்ளியின் முதல் கல்லூரியாக கி.பி.1882 முதல் 1934 வரை எஸ்.பி.ஜி. கல்லூரி (நற்செய்தி பரவல் கழகம், Society for the Propagation of the Gospel) எனும் பெயரில் அமைந்த முதற்கால கட்டத்திற்குப் பிறகு 1966 - ஆம் ஆண்டு பிஷப் ஹீபர் கல்லூரி மீண்டும் புத்துயிர்ப்புப் பெற்றது.

1981 - ஆம் ஆண்டு தமிழ்மாமணி முனைவர் ப.ச.ஏசுதாசன் அவர்களின் தலைமையில் முதுகலைத் தமிழாய்வுத்துறை தொடங்கப்பெற்றது. 1984 - இல் பகுதிநேர ஆய்வியல் நிறைஞர் படிப்பும், 1985 - இல் முழுநேர ஆய்வியல் நிறைஞர் படிப்பும் தொடங்கப் பெற்றன.1985, 1986 - ஆம் ஆண்டுகளில் முறையே பகுதிநேர, முழுநேர முனைவர்பட்ட ஆய்வுப் படிப்புகளும், 2018 - ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ்ப்படிப்பும் தொடங்கப் பெற்றன. தமிழாய்வுத் துறையிலிருந்து நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட மாணவர்களும், அறுநூறுக்கும் மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களும் உருவாகியுள்ளனர். இத்தகைய வளர்ச்சிக்கு மேனாள் துறைத்தலைவர்கள் அரும்பணியாற்றியுள்ளனர்.

மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்கள் எமது தமிழாய்வுத்துறையின் மேனாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஷப் கால்டுவெல் புத்தக நிலையம், சீகன்பால்க் பதிப்பகம் என்பன தமிழாய்வுத்துறைக்குப் பெருமை சேர்ப்பன.

தொடர் நிகழ்வுகள்

  • அறிவினை அகண்டமாக்க 'வாசிக்கலாம் வாங்க’ - வாசிப்பு இயக்கம்
  • மாணாக்கரின் இலக்கியப் படைப்புத் திறமையை வெளிக்கொணர 'சிறகு படைப்பரங்கம்'
  • இயல், இசை. நாடகத் திறமையை மாணவர்களிடையே ஆர்வமூட்டி வளர்க்கும் நோக்கில் நடத்தப்பெறும் முத்தமிழ் விழா
  • தொடக்கப் பள்ளிப் பிள்ளைகளுக்கான 'கதைப்போமா' (கதைவழித் திறன் வளர் இயக்கம்)
  • மரபினைப் போற்றும் “தமிழ் மரபுத் திருவிழா“
  • கலை வளர்த்திடும் மாநில அளவிலான 'தமிழ் மாணவர் கலைவிழா’
  • மாணவர்களின் அம்மாக்களுக்காக 'அம்மா இங்கே வா' (உளநல நிகழ்வு)
  • ஆய்வுச் செயல்பாட்டை ஊக்குவித்திட ஆசிரியர் கருத்தரங்கம், உலகளாவிய கருத்தரங்கம், பல்கலைக்கழக அளவிலான மாணவர் கருத்தரங்கம், அறக்கட்டளைகளின் வழி சொற்பொழிவுகள்
  • திறன் மேம்பாட்டிற்கென நிறுவனத் தொடர்பிலான பணிக்கல்விப் பயிற்சிகள், தலைமைத்துவப் பயிற்சிகள்
  • சமுதாயத்துடன் நெருக்கத்தைத் தொடர்ந்து பேணும் விரிவாக்கப் பணிகள்

பொதுநோக்கு

  • சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலக்கியத்துடன் அறிவு, ஆளுமை, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்பித்தல்.
  • மானுட விழுமியங்களையும் கிறித்தவச் சேவைமனப்பாங்கையும் மாணவர்களுக்கு முழுமையாக எடுத்துரைத்தல்.
  • நவீன அறிவியலையும் சமூக அசைவியக்கத்தையும் அறம்பிறழாமல் எதிர்கொண்டு வாழும் ஒழுங்கை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்.

இலக்கு

  • தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வகை செய்தலும்,
  • தமிழ்ப் படித்தோர் தகைசான்ற தலைமை எய்தலுமே

வழங்கப்படும் படிப்புகள்

  • இளங்கலைத் தமிழ் (B.A. Tamil)
  • முதுகலைத்தமிழ் (M.A. Tamil)
  • ஆய்வியல் நிறைஞர் (M.Phil.)
  • முனைவர்பட்டம் (Ph.D)

பட்டயம் / சான்றிதழ் படிப்புகள்

  • இதழியல் பட்டயப் படிப்பு (Diploma in Journalism)

Department Structure

துறையின் சிறப்பான செயற்பாடுகள்


  • ஒவ்வொரு பருவத்திலும் நடத்தப் பெறும் ஆசிரியர் கருத்தரங்கு
  • கல்லூரியின் அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைக்கும் முத்தமிழ் விழா
  • வாராந்திர இலக்கிய / திறனாய்வு வட்டங்கள்
  • விரிவாக்கப் பணிகள்
HOD Image

தொடர்புக்கு:

  • முனைவர் பா.இராஜ்குமார்
  • துறைத்தலைவர்
  • தமிழாய்வுத்துறை
  • இணைப்பு எண்கள் : +251 (காலைப் பிரிவு), +151 (மாலைப் பிரிவு)
  • அலைபேசி : +91 9789272684